அரவாணிகளும் இனி குவா குவா பாக்கியம்
Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
டெல்லி: நவீன அறுவை சிகிச்சை மூலம் அரவாணிகளும் குழந்தை பெற்றுக் கொள்ளும் அதி நவீன அறுவைச் சிகிச்சை இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான கழக மருத்துவமனையிலும், வேறு சில முக்கிய மருத்துவமனையிலும் இந்த அறுவைச் சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரவாணிகள் உடலில் சிலருக்கு ஆண் தன்மை அதிகமாக இருக்கும். சிலருக்கு பெண் தன்மை அதிகமாக இருக்கும். இந்த நவீன அறுவை சிகிச்சை மூலம், அவர்களின் உடலில் எந்த இனத் தன்மை அதிகமாக உள்ளதோ அந்த இனத்தைத் சேர்ந்தவராக அவர்களால் மாற முடியும்.
இந்த அறுவைச் சிகிச்சை பல கட்டங்களில் மேற்கொள்ளப்படும். ஆணாக மாற விரும்புவோருக்கு ஆணுக்கான ஹார்மோன் ஊசியும், பெண்ணாக விரும்புபவருக்கு அதற்கான ஹார்மோன் ஊசியும் போடப்படும். பின்னர் பிறப்பு உறுப்பு, கர்ப்பப்பை ஆகியவற்றிலும் ஆபரேஷன் செய்யப்படும்.
இதன்மூலம் பெண்ணாக மாறியவர்கள் குழந்தை பெறலாம். இதுவரை 1100 அரவாணிகளுக்கு இத்தகைய சிகிச்சை அளித்து இருப்பதாகவும் இதில் 18 பேருக்கு குழந்தை பிறந்து இருப்பதாகவும் அகில இந்திய விஞ்ஞான மருத்துவ கழக மகப்பேறு துறை தலைவர் டாக்டர் குப்தா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான கழக மருத்துவமனையிலும், வேறு சில முக்கிய மருத்துவமனையிலும் இந்த அறுவைச் சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரவாணிகள் உடலில் சிலருக்கு ஆண் தன்மை அதிகமாக இருக்கும். சிலருக்கு பெண் தன்மை அதிகமாக இருக்கும். இந்த நவீன அறுவை சிகிச்சை மூலம், அவர்களின் உடலில் எந்த இனத் தன்மை அதிகமாக உள்ளதோ அந்த இனத்தைத் சேர்ந்தவராக அவர்களால் மாற முடியும்.
இந்த அறுவைச் சிகிச்சை பல கட்டங்களில் மேற்கொள்ளப்படும். ஆணாக மாற விரும்புவோருக்கு ஆணுக்கான ஹார்மோன் ஊசியும், பெண்ணாக விரும்புபவருக்கு அதற்கான ஹார்மோன் ஊசியும் போடப்படும். பின்னர் பிறப்பு உறுப்பு, கர்ப்பப்பை ஆகியவற்றிலும் ஆபரேஷன் செய்யப்படும்.
இதன்மூலம் பெண்ணாக மாறியவர்கள் குழந்தை பெறலாம். இதுவரை 1100 அரவாணிகளுக்கு இத்தகைய சிகிச்சை அளித்து இருப்பதாகவும் இதில் 18 பேருக்கு குழந்தை பிறந்து இருப்பதாகவும் அகில இந்திய விஞ்ஞான மருத்துவ கழக மகப்பேறு துறை தலைவர் டாக்டர் குப்தா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment